எங்கடா என் ஆறு ன்னு கேட்டேன்....
எங்கடா என் காடுன்னு கேட்டேன்......
.
எங்கடா என் மரங்கள்னு கேட்டேன்....
.
எங்கடா என் மலைகள்னு கேட்டேன்....
.
எங்கடா என் மண்ணுனு கேட்டேன்....
.
எங்கடா என் மொழின்னு கேட்டேன்.....
.
எங்கடா என் ஏறுதழுவுதல்னு
கேட்டேன்.....
.
கடைசியா பதிலைச்சொன்னான்.....
.
இதையெல்லாம் வித்து தான்.....
.
உங்களுக்கு அரிசி கொடுத்தோம்....
.
மாவரைக்க கிரைண்டர் கொடுத்தோம்....
.
மஞ்சள அரைக்க மிக்சி கொடுத்தோம்....
.
மயிர்காயவைக்க ஃபேனும்
கொடுத்தோம்....
.
மானாட மயிலாட காண டிவியும்
கொடுத்தோம்.....
.
கேம் விளையாட லேப்டாப்
கொடுத்தோம்....
.
தாலிக்கு தங்கமும்....அதை அறுக்க
டாஸ்மாக்கும் கொடுத்தோம்.....
.
என்றார்கள் இழித்துக்கொண்டே.....
.
அடுத்த தலைமுறைக்கு என்னடா வளமிருக்கும்...?
என்றேன்....
.
அப்படி ஒன்றை வரவே விடமாட்டோமே ...!!
என்றார்கள்....
.
யாரடா நீங்கள் ...? என்றேன்....
.
நாங்கள் தான் அரசியல்வாதிகள்
என்றார்கள்.....
No comments:
Post a Comment