கோயிலை
இடித்துவிட்டு பள்ளிக்கூடம் அமைப்போம் என்றார்கள்... ஆனால் உண்டியலை அகற்ற
மறந்துவிட்டார்கள்...!!!
ஓடும்
ஓட்டமெல்லாம் மரணத்துக்காத்தான் எனும் போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்...!!!
நான் உங்களை
பற்றி நினைப்பதை எல்லாம் சொல்லி விட வேண்டுமானால், நீங்கள் என் எதிரியாக இருக்க வேண்டும்...!!!
ஏசி என்பது நாம்
இருக்கும் சின்ன அறையை குளிராகவும் இந்த பெரிய பூமியை சூடாகவும் மாற்றுகிறது...!!!
முடி
வளர்க்கிறதுக்கு எடுக்குற முயற்சி, செடி
வளர்ப்பதற்கு யாரும் எடுக்கிறதில்லை...!!!
அனைவரும்
ஆவேசத்துடன், முன்னேறிச்
சென்று கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் அசந்தால், நம்மையும் மிதித்துத் தாண்டிச் சென்று
விடுவார்கள்...!!!
தன்னைப் புலி
என்று நினைக்கும் எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே
கர்ஜிக்கிறார்கள்...!!!
எல்லோரையும்
திட்டிக்கொண்டே இருப்பவனுக்கு நிஜ வாழ்வில் நண்பர்கள் இல்லாமல் இருப்பதும் இணைய
வாழ்வில் நிறைந்து இருப்பதும் விசித்திர முரண்...!!!
அம்மா சமைத்த
அமுதை விஷமாக்கினேன் பிளாஸ்டிக் டப்பாக்குள் அடைத்து...!!!
கடவுளுக்கு
நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்.. கடவுள் உங்கள் எதிரில்
இருந்தாலும் தெரிவதில்லை...!!!
மரங்கள் மட்டும்
"WIFI" சிக்னல்
தருமானால் மரங்களாக நட்டுத் தள்ளியிருப்போம்... ஆனால் பாவம், மரங்களால் சுவாசிக்க "ஆக்சிஜன்"
மட்டுமே தர முடிகிறது...!!!
துரோகத்துக்கும்,
அவமானத்திற்கும் பிறகும்
வாழ்ந்து காட்டுவதே ஆகச்சிறந்த பழிவாங்குதல்...!!!
அனைத்து
அன்னையும் உயர்ந்தவர்கள் அல்ல... ஏனெனில்... சில குழந்தைகள் குப்பை தொட்டியிலும்
கிடைக்கின்றன...!!!
No comments:
Post a Comment